இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து.. தந்தை, மகளுக்கு நேர்ந்த சோகம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் பகுதியில் வசித்து வந்த கார்த்திக் என்பவர்
தனது மகன் மற்றும் மகளுடன் நல்லாமூரில் சாலை ஓரமாக இருசக்கர வாகனத்தில் நின்றிருந்தார்.அப்போது
செய்யூரில் இருந்து அதிவேகமாக வந்த கார், கார்த்திக்கின் வாகனத்தின் மீது மோதியது.இந்த விபதிதல் கார்த்திக் மற்றும் அவரது மகள் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story
