Muthupet | TN Police | Accident | மரத்தில் மோதி.. திடீரென கடைகள் புகுந்த கார்.. பரபரப்பு காட்சி
மரத்தில் மோதி.. திடீரென கடைகள் புகுந்த கார்.. பரபரப்பு காட்சி
மரத்தில் மோதி.. திடீரென கடைகள் புகுந்த கார்.. பரபரப்பு காட்சி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே, நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி, பின்னர் டீக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 10 பேர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். காரைக்காலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திருநெல்வேலி திரும்பிக் கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். டீக்கடையில் இருந்த பொருட்களும் சேதமடைந்த நிலையில் விபத்து குறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
