சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிர்ப்பு- 4-வது நாளாக தொடரும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 4-வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

இதனிடையே, சிஏஏ எதிர்ப்பு போராட்ட மேடையில், திருமணம் நடைபெற்றது. ஷயின்ஷா மற்றும் சுமையாவுக்கு, இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் அனைவரும், மணமக்களை வாழ்த்தினர். பின்னர், மணமக்கள் வீட்டு சார்பில், போராட்டக்காரர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com