ராமநாதபுரம் பாம்பூரணி கரையில் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக தன்னெழுச்சி போராட்டக் குழு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போராட்டத்தில், கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர். அப்போது, மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.