நாளை இந்நேரம் தமிழகத்தில் மோடி - தூத்துக்குடியில் அறிவிக்கப்பட்ட மாற்றம்..

x

பிரதமர் மோடி வருகை எதிரொலி - காவல்துறை அறிவிப்பு

விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலைய திறப்பு விழாவுக்காக நாளை தூத்துக்குடி வரவுள்ளார் பிரதமர் மோடி. பிரதமர் வருகையை ஒட்டி போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு. 26.07.2025 மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை, தூத்துக்குடி, நெல்லை வழியே செல்ல கனரக, சரக்கு வாகனங்களுக்கு தடை. வாகைகுளம் விமான நிலையத்தை கடந்து செல்ல கனரக, சரக்கு வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. மாற்று ஏற்பாடாக மங்களகிரி விலக்கில் வலது புறமாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு வருகை தரும் மிக முக்கிய நபர்களின் வாகனங்ளை தவிர மற்ற எந்த வாகனங்களுக்கும் விமான நிலையத்தின் உள்ளே அனுமதி இல்லை


Next Story

மேலும் செய்திகள்