காளை விடும் விழாவில் சீறிப் பாய்ந்த காளைகள்..
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வாழியூரில் நடைபெற்ற காளை விடும் விழாவில், சுற்றுவட்டாரம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகள் முட்டியதில், இளைஞர்கள் சிலர் லேசான காயமடைந்தனர். இதில் இலக்கை அடைந்த காளைகளுக்கு, முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 75 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டன. இந்த விழாவை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கண்டு களித்தனர்.
Next Story
