Buddhist Sculpture || தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1000 ஆண்டுகள் பழமை..
Buddhist Sculpture || தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1000 ஆண்டுகள் பழமை..
Summary
விழுப்புரம் மாவட்டம் பெரிய தச்சூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பவுத்த மற்றும் துவார பாலகர் சிற்பம் கண்டறியப்பட்டது. இதனை விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளார். ஐந்து தலை நாகத்துடன் இருக்கும் சிற்பம் பவுத்த சமயத்தை சார்ந்தது என்றும், தலையில் பெரிய கிரீடத்துடன் உள்ள சிற்பம் சைவ சமயத்தை சார்ந்தது என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் சைவ, பவுத்த வழிபாடுகள் இருந்திருக்க கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
