BSNL டவருக்காக ஒன்றுதிரண்ட 8 ஊர் மக்கள் - Nellai-ல் பரபரப்பு

x

நெல்லை மாவட்டம் கஸ்தூரிரங்கபுரம் ஊராட்சியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தகவல் தொடர்பு கோபுரம் திறக்கப்படாததை கண்டித்து, எட்டு கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சி அலுவலகம், தபால் நிலையம், வருவாய்த்துறை அலுவலகம் போன்றவற்றில் மாணவர்களும், பொது மக்களும் அரசு திட்டங்களை பயன்படுத்த முடியாமல் சரியான நெட்வொர்க் இல்லாததால் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய அவர்கள், இதனால் தாங்கள் கற்காலத்தில் வாழ்வதாகவும் வேதனை தெரிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்