#Breaking|| மகனின் அவலநிலை கண்டு 3 பேரை கொன்று உயிரை மாய்த்த தந்தை.. அதிர்ச்சியில் உறைந்த சேலம்

x

சேலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மகனின் அவலநிலையை கண்டு மன உளைச்சலுக்கு ஆளான நபர் குடும்ப உறுப்பினர்கள் 3 பேரை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்..

சேலம் கன்னங்குறிச்சி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் திலக் - மகேஸ்வரி தம்பதியினர். இவர்களது மகன் சாய் கிரிசாந்த்(6) வாய் பேச முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.

இதனைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளான திலக் தனது தந்தை சிவராமன், தாய் வசந்தா, மனைவி மகேஸ்வரி, மகன் சாய் பிரசாந்த் ஆகியோருக்கு தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து விட்டு திலக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதில் வசந்தா அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.

இச்சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்