#BREAKING | ARR கான்செர்ட்... ECR-ல் சிக்கிய முதல்வர் கான்வாய் - தொடங்கிய விசாரணை

x

ஏ ஆர் ரகுமான் இசைக் கச்சேரி- முதல்வர் கான்வாய் நின்ற விவகாரம் தொடர்பாக விசாரணை !

கடந்த ஞாயிற்றுக்கிழமை பனையூர் அருகே ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் இசை கச்சேரி நடத்தப்பட்டு பெரும் குளறுபடிகள் ஆனது

டிக்கெட் வாங்கி வந்தபலரும் நிகழ்ச்சியை காண முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரும் குழப்பம் ஏற்பட்டது

இது தொடர்பாக ஏ ஆர் ரகுமான் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நானே பலியாடு ஆகிறேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்

இசை கச்சேரியினால ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின் போது, அந்த வழியாக வந்த தமிழக முதலமைச்சரின் கான்வாய் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்றது

இதனால் பதறிய அதிகாரிகள் உடனடியாக நிலைமையை கட்டுப்படுத்தி எதிர் திசையில் முதல்வரின் வாகனத்தை அனுப்பி வைத்தனர்

முதலமைச்சரின் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய விவகாரம் தொடர்பாக அங்கு பணியில் இருந்த அதிகாரிகளிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்