16 வயது காதலியின் கழுத்தை அறுத்து காதலன் த*கொலை

x

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே 16 வயது காதலியின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு, காதலன் தூக்கிட்டு த*கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலம்பாடி கிராமத்தை சேர்ந்த வசந்த் குமார் என்பவரும், அதே ஊரைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியும், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. காதலுக்கு இருதரப்பிலும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மனமுடைந்த வசந்த், காதலியின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு, தூக்கிட்டு த*கொலை செய்துகொண்டார். காதலி உயிர்பிழைத்த நிலையில், வசந்த்தின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்