பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சிறுவன்

x

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே 9ம் வகுப்பு மாணவன் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பட்டினத்தை சேர்ந்த மோகன் என்பவரின் 13 வயது மகன், மாலை பள்ளி முடிந்து வந்து வீட்டருகே உள்ள மைதானத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், மாணவனின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்