வெடிகுண்டு மிரட்டலின் எதிரொலி - நீதிமன்றத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

157 ஆண்டு கால பாரம்பரிய சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, கடந்த இரு தினங்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது.
வெடிகுண்டு மிரட்டலின் எதிரொலி - நீதிமன்றத்துக்கு கூடுதல் பாதுகாப்பு
Published on

157 ஆண்டு கால பாரம்பரிய சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, கடந்த இரு தினங்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. அதை தொடர்ந்து, நடந்த உயர்நீதிமன்ற பாதுகாப்பு குழு கூட்டத்தில், பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் 7 வாயில்களிலும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கமாண்டோ வீரர்களும் நுழைவு வாயில்களில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வாகன நிறுத்தப்பட்ட பிறகே சோதனை நடத்தப்படுகிறது. வழக்கறிஞர்களின் அடையாள அட்டைகளை காண்பித்த பிறகே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

X

Thanthi TV
www.thanthitv.com