Black Magic | ஊருக்கு நடுவே `திகில்’ - பேயா காட்டேரியா.. கிட்ட நெருங்கவே நடுங்கிய மக்கள்

வீதியில் மண்டை ஓடு -அச்சத்தில் மக்கள்

உளுந்தூர்பேட்டையில் வீதியில் மண்டை ஓடு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்னை சத்யா வீதியில் உள்ள நான்கு முனை சந்திப்பு பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் மண்டை ஓடு, பொம்மை ஆகியவற்றை வைத்து பூஜை செய்துள்ளனர்.இதனால் அப்பகுதி மக்கள் அவ்வழியை கடந்து செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு =வந்து உளுந்தூர்பேட்டை போலீசார் மண்டை ஓட்டை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com