Erode BJP| பழிவெறியில் ஈரோடு பாஜக முக்கிய புள்ளி செய்த சம்பவம் - பெரும் பரபரப்பு
அவிநாசி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் தனியார் நிறுவனம் நடத்திய மதுபானத்துடன் கூடிய நடன நிகழ்ச்சியில் ஈரோடு பா.ஜ.க வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரகு சூர்யா அவரது நண்பர்களுடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவர்களை வெளியேற்றி உள்ளனர். இந்நிலையில் பீளமேட்டில் அதே நிறுவனம் மீண்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதை அறிந்த ரகு சூர்யா தனது நண்பர்களுடன் சென்று தனியார் நிறுவன ஊழியர்களை பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக பாஜக பிரமுகர் ரவி சூர்யா உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
Next Story
