அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் திருமணம் - ஒமிக்ரான் பரவலை தடுக்க வேண்டுதல்

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவாமல் இருக்க வேண்டி அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்து வைத்து விநோத வழிபாட்டை நடத்தியுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே முள்ளுவாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் இந்த வழிபாடு நடந்துள்ளது. கிராம மக்கள் சீர் வரிசையை ஊர்வலமாக கொண்டு வந்து வேத மந்திரங்கள் முழங்க திருமணத்தை நடத்தி வைத்தனர். வருகை தந்த பக்தர்களும் மொய் வைத்து விட்டு சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com