தொடர் கனமழையால் நிரம்பிய பில்லூர் அணை..!பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரத்து 660 கன அடியாக அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்துள்ள நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 12 ஆயிரத்து 660 கன அடி உபநீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் 3 வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
