பசுமாடு மீது பைக் மோதி விபத்து - இருவர் படுகாயம்
பசுமாடு மீது பைக் மோதி விபத்து - இருவர் படுகாயம்
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பசுமாடு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். பென்னாகரம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் ராமன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கரிகுட்டனூர் என்ற பகுதியில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம், கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பசுமாட்டின் மீது மோதியது. இதில் இருவரும் சாலையோரம் இருந்த பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பசுமாட்டிற்கு கால் முறிவு ஏற்பட்டது.
Next Story
