மது போதையில் மயங்கி கிடந்து போலீசாரிடம் சிக்கிய திருடன்...

செல்போனையும் திருடி சென்றவர் மது போதையில் மயங்கி கிடந்தபோது போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
மது போதையில் மயங்கி கிடந்து போலீசாரிடம் சிக்கிய திருடன்...
Published on
திருவேற்காட்டில் இருசக்கர வாகனத்தையும், நடந்து சென்ற மற்றொருவரிடம் செல்போனையும் திருடி சென்றவர் மது போதையில் மயங்கி கிடந்தபோது போலீசாரிடம் சிக்கியுள்ளார். சென்னை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர், ஆயிரம் விளக்கு பகுதியில் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும், நடந்து சென்றுகொண்டிருந்த, சியாம்பாபு என்பவரிடம் செல்போனையும் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை தேடி வந்தனர். இந்த நிலையில், திருவேற்காட்டில் மது போதையில் முட்புதரில் மயங்கி கிடந்த வெங்கடேசன் போலீசாரிடம் சிக்கினார்.
X

Thanthi TV
www.thanthitv.com