சென்னை முகப்பேர் பகுதியில் பார்க்கிங் தொடர்பான தகராறில் உயர்நீதிமன்ற நீதிபதி மகன், டி.வி. தொகுப்பாளர் தர்ஷன் இடையே மோதல் ஏற்பட்டது. தர்ஷன், தகாத வார்த்தைகளால் பேசியதோடு, நண்பர்களோடு இணைந்து தன்னை தாக்கியதாக நீதிபதியின் மகன் குற்றம்சாட்டியுள்ளார். தொகுப்பாளர் தர்ஷன் தரப்பினரிடம் கேட்ட போது, நீதிபதியின் மகன் தனது சகோதாரர் மீது சூடான காபியை ஊற்றி, தகாத வார்த்தைகளை பேசியதோடு, மிரட்டல் விடுத்ததாக புகார் கூறியுள்ளனர். நீதிபதி மகன், டி.வி தொகுப்பாளர் தர்ஷன் தரப்பு புகார் குறித்து ஜே.ஜே.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.