பவானி அணைக்கு நீர்வரத்து 22,333 அடியாக அதிகரிப்பு

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பவானி அணைக்கு, நீர்வரத்து 22 ஆயிரத்து 333 கனஅடியாக அதிகரித்துள்ளது.
பவானி அணைக்கு நீர்வரத்து 22,333 அடியாக அதிகரிப்பு
Published on
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பவானி அணைக்கு, நீர்வரத்து 22 ஆயிரத்து 333 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் 98 புள்ளி 06 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 27 புள்ளி 2 டிஎம்சி யாக உள்ளது. இதனையடுத்து, அணையிலிருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் 3 நாட்களில் அணை நிரம்ப வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com