``அது எப்படிடா ஒரு பிச்சைக்காரன் இப்படி பண்ணலாம்’’ - சென்னை பிளாட்பாரத்தில் ஈகோவில் அடித்து கொலை

சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள சர்ச் வாசலில் தங்கி பிச்சை எடுத்து வந்த சுகு என்ற முதியவர், சர்ச் வாசலில் தூங்கி கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரிடம் இருந்து பணத்தை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் தன் கையில் வைத்திருந்த பிளேடால் மர்ம நபர்களின் கையை கிழித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் அவரை அடித்து, தலையை‌ சுவரில் மோதியதில் சுகு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். காவல்துறையினர் அவரை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல்துறையினர், கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com