வீட்டை வங்கியில் அடமானம் வைத்த பெண்... மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு

x

சென்னையில், வீட்டை அடமானம் வைத்து வங்கிக்கடன் பெற்ற பெண் ஒருவர், வங்கி ஊழியர்களின் நெருக்கடியால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் தனலட்சுமி. இவர், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தன் வீட்டை தனியார் வங்கி ஒன்றில் அடமானம் வைத்து 83 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதில், அசலும், வட்டியும் சேர்த்து சுமார் 60 லட்சம் ரூபாய் பணத்தை தனலட்சுமி திருப்பி செலுத்தியதாகவும், ஆனால் 60 லட்சம் ரூபாயும் வட்டியாகவே எடுத்துக் கொண்ட வங்கி ஊழியர்கள், மேலும் 83 லட்ச ரூபாய் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த தனலட்சுமி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை உடனடியாக மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்