ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் தனியார் வங்கிகள் - வங்கி ஊழியர் சம்மேளனம் குற்றச்சாட்டு

ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் தனியார் வங்கிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றுவதில்லை என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் தனியார் வங்கிகள் - வங்கி ஊழியர் சம்மேளனம் குற்றச்சாட்டு
Published on

தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்தும் வாகன சோதனைகளில் பெரும்பாலான இடங்களில் ஏடிஎம் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. இது தொடர்பாக இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் சி.பி கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெரும்பாலான தனியார் வங்கிகள் தனியார் ஏஜென்சிகள் மூலம் பணம் கொண்டு செல்லும் பணிகளை செய்வதாக கூறினார். ஆனால் அந்த நிறுவனங்கள் நடைமுறைகளை முறையாக பின்பற்றாததால் தான் இதுபோல் பணம் பறிமுதல் செய்யப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

==

X

Thanthi TV
www.thanthitv.com