"தேவையா இது?" - வைரல் வீடியோவால் பஞ்சரான பர்ஸ்.. ஒரு போட்டோவுக்கு ரூ.25000 அபராதம்

பந்திப்பூர் புலிகள் காப்பகம் அருகே, சாலையில் நின்றிருந்த யானையை தொந்தரவு செய்து புகைப்படம் எடுக்க முயன்ற நபருக்கு வனத்துறையினர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சுற்றுலா பயணியிடம் மன்னிப்பு கடிதமும் எழுதி வாங்கியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com