முருகனை காவலில் எடுத்த பையப்பனஹள்ளி போலீசார்

திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனை, பெங்களூரு பையனஹள்ளி போலீசார் 8 நாள் காவலில் எடுத்து அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர்.
முருகனை காவலில் எடுத்த பையப்பனஹள்ளி போலீசார்
Published on
திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனை, பெங்களூரு பையனஹள்ளி போலீசார் 8 நாள் காவலில் எடுத்து அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர். திருச்சியில் நடைபெற்ற கொள்ளையில் கடந்த 11ஆம் தேதி பெங்களூருவில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்த பொம்மனஹள்ளி போலீசார் நடத்திய விசாரணையில் 11 கிலோ தங்க நகைகள், 541 கிராம் வைரநகைகள், 37 கிராம் பிளாட்டின ஆபரணங்கள் மீட்கப்பட்டன. 6 நாள் விசாரணைக்குப் பிறகு கடந்த 16ஆம் ஆஜர்படுத்திய போலீசார் மீண்டும் 8 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். மொத்தம்14 நாள் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய முருகனை தங்கள் சரகத்தில் நடந்த கொள்ளை தொடர்பாக பையப்பனஹள்ளி போலீசார் 8 நாள் காவலில் எடுத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com