மதுரை சோழவந்தான் அருகே அய்யனார் சுவாமி கோவில் புரவி எடுப்பு திருவிழா 15 ஆண்டுகளுக்கு பிறகு கோலகலமாக நடைபெற்றது. அய்யனார் சுவாமி, கருப்பசாமி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட குதிரை வடிவிலான புரவிகளை ஏராளமான இளைஞர்கள் தோளில் சுமந்தபடி ஊர்வலமாக கொண்டு சென்று தங்களது நேர்தி கடன்களை செலுத்தினர்.