ஆட்டோ ரேஸில் மெக்கானிக் உயிரிப்பு : 6 பேர் கைது

சென்னையில், தாம்பரம் - புழல் புறவழிச்சாலையில், ஆட்டோ ரேஸில் ஈடுபட்டு மெக்கானிக் பலியான விவகாரத்தில், 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆட்டோ ரேஸில் மெக்கானிக் உயிரிப்பு : 6 பேர் கைது
Published on

வில்லிவாக்கம், திருவேங்கடம் தெருவை சேர்ந்த பிரபாகர்,விபத்தில் அடிபட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தாம்பரம் - புழல் புறவழிச்சாலையில், ஆட்டோ ரேஸில் ஈடுபட்டபோது, பிரபாகர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து, ரேசில் ஈடுபட்டவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். ரேசின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து, பூந்தண்டலத்தைச் சேர்ந்த மதார்சா, கிண்டியை சேர்ந்த தனசேகர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 3 ஆட்டோக்கள், ஒரு கார், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், உயிரிழந்த பிரபாகர், ரேஸ் ஆட்டோக்களை தயார் செய்வதிலும், ரேசில் பங்கு பெறுவதிலும் கைதேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com