

ஆகஸ்ட் 17 ஆம் தேதியுடன் அத்திவரதர் உற்சவம் நிறைவடைவதை அடுத்து, 24 படிக்கட்டுகள் கொண்ட அனந்த சரஸ் திருக்குளம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்பட்டுள்ளது. நீராழி மண்டபம் மற்றும் கோபுரத்தை சீரமைக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 17 ஆம் தேதி நள்ளிரவில் அத்திவரதர் அனந்த சரஸ் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்துக்கு எழுந்தருளுகிறார். பின்னர் கிழக்கு கோபுர குளத்திலிருந்து அனந்தசரஸ் திருக்குளத்திற்கு தண்ணீர் நிரப்பப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.