தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக்கரையில் உள்ள ஆதிச்சநல்லூரில், மாநில அரசு சார்பில் அகழாய்வுக்கான முதற்கட்ட பணிகள் இன்னும் ஓரிரு நாளில் தொடங்க உள்ளது. இந்நிலையில், சிந்து சமவெளி நாகரிகத்தை விட மூத்த நாகரிகம் என ஆதிச்சநல்லூர் நாகரிகத்திற்கு இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.