உதவி தொழிலாளர் ஆய்வாளர் கார் ஏற்றி கொலை - வீடியோ வெளியாகி பரபரப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உதவி தொழிலாளர் ஆய்வாளர் கார் ஏற்றி, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உதவி தொழிலாளர் ஆய்வாளர் கார் ஏற்றி, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்னை அரவிந்தர் நகரில் வாக்குவாதத்தின் போது கல்லூரி மாணவர் ஒருவர் காரை ஏற்றியதில், உதவி தொழிலாளர் ஆய்வாளராக பணியாற்றிய சிவமூர்த்தி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் சிவமூர்த்தியின் குடும்பத்தினரும் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார், ஆதித்யா, ரித்திக் குமார், ஹரீஷ் ஆகிய மூன்று கல்லூரி மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கார் மோதியதையடுத்து குடும்பத்தினர் கதறும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
