சென்னையை புரட்டிப்போட்ட வெள்ளம்.. அரணாக நின்று தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் - ரத்தோரின் ஆக்‌ஷன் பிண்ணனி..

சென்னையை புரட்டிப்போட்ட வெள்ளம்.. அரணாக நின்று தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் - ரத்தோரின் ஆக்‌ஷன் பிண்ணனி..
Published on

 ரவுடிகளுக்கு, அவர்களுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்பேன் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள பெருநகர சென்னை காவல் ஆணையர் அருண் கூறியுள்ளார்.

110-வது சென்னை காவல் ஆணையராக ஏடிஜிபி அருண் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பது, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், போக்குவரத்து சிக்கல்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்று கூறினார்.

காவல்துறையில் உள்ள ஊழல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றை தடுப்பதிலும் முன்னுரிமை கொடுப்பேன் என்று அவர் கூறினார். ரவுடியிசத்தை கட்டுப்படுத்த ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும் என்றும் அவர் அதிரடியாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com