ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமிக்கு, நாளை நேரில் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு
Published on

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமிக்கு, நாளை நேரில் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதியன்று நடந்த நிகழ்வுகள் குறித்தும், பாதுகாப்பு அதிகாரிகள் கூறி தான் சி.சி.டி.வி கேமராக்கள் இயக்கத்தை நிறுத்தினோம் என்ற அப்பல்லோ மருத்துவமனையின் விளக்கம் குறித்தும் பெருமாள்சாமியிடம் ஆணையம் கேள்வி எழுப்பவுள்ளது. மேலும் இந்த வாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அல்லது செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பவும் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com