ஆம்ஸ்ட்ராங்கின் 10 ஆம் மாதம் நினைவேந்தல் பொதுகூட்டம் | கண்கலங்கிய பொற்கொடி
வேலூர் மாவட்டம் கே .வி .குப்பம் பேருந்து நிலையம் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் 10 ஆம் மாதம் நினைவேந்தல் பொதுகூட்டம் நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, ஊர்வலமாக நினைவேந்தல் பொது கூட்டத்திற்கு சென்றார்.
அப்போது நிர்வாகிகள் மேடையில் பேசிக்கொண்டிருந்த போதே பொற்கொடி கண்கலங்கியபடியே அமர்ந்திருந்தார்.
நிகழ்ச்சியின் முடிவில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Next Story
