Ariyalur | மத்திய நிதியமைச்சர் அனுப்பி வைத்த கங்கை நீரால் பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம்

Ariyalur | மத்திய நிதியமைச்சர் அனுப்பி வைத்த கங்கை நீரால் பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம்

Ariyalur | மத்திய நிதியமைச்சர் அனுப்பி வைத்த கங்கை நீரால் பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம்

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான 'ஆடி திருவாதிரையை முன்னிட்டு பிரகதீஸ்வரருக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது..... பிரகதீஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அஞ்சல் துறை மூலமாகக் கங்கை நீரை அனுப்பி வைத்தார். இந்நிலையில், மேளதாளங்கள் முழங்க கங்கை நீர் புனிதக் குடங்களில் கொண்டுவரப்பட்டது.... பின்னர், ஓதுவார்கள் சிவபுராணம் பாட, வேத மந்திரங்கள் முழங்க பிரகதீஸ்வரருக்குக் கங்கை நீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com