Ariyalur Accident | ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த நபர் | தண்டவாளத்தில் துண்டாகி கிடந்த கால்

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த நபர் | தண்டவாளத்தில் துண்டாகி கிடந்த கால்

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த நபர் - கால் துண்டாகி பரபரப்பு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ராக்ஃபோர்ட் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த நபரின் கால் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் ரயில் நிலையம் அருகே, கரூரைச் சேர்ந்த ரேணுகோபால் கீழே விழுந்ததில் அவரது வலது கால் துண்டாகி தண்டவாளத்தில் கிடந்ததாகவும், மற்றொரு காலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com