"அரவக்குறிச்சி இடைத்தேர்தல் : அசம்பாவிதம் ஏற்படாது" - தேர்தல் டிஜிபி சுக்லா உறுதி

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
"அரவக்குறிச்சி இடைத்தேர்தல் : அசம்பாவிதம் ஏற்படாது" - தேர்தல் டிஜிபி சுக்லா உறுதி
Published on
அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்தல் டிஜிபி அசுதோஸ் சுக்லா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில், 3 ஆயிரத்து 173 காவலர்கள் ஈடுபட உள்ளனர். தேர்தலுக்கு 2 நாட்களுக்குமுன் வெளியூர் நபர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று காவல்துறை தலைமை இயக்குநர் அசுதோஸ் சுக்லா தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாது என அவர் உறுதிபட கூறியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com