உழவர் திருநாளை ஒட்டி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருவாப்பாடியில் 4 பிரிவுகளில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இதில், முதல் 3 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.4 லட்சம் ரொக்கப் பரிசும் வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டது.