சிசிடிவி கேமராவை பார்த்தவுடன் தானாக மாறிய திருடனின் உடல் - மிரளவிடும் காட்சிகள்

அரக்கோணம் அருகே திருட வந்த வீட்டில் சிசிடிவி கேமரா இருந்ததை பார்த்த திருடன் மாற்றுத் திறனாளி போல் நடித்த கோமாளித்தன காட்சிகள் வைரலாகி உள்ளது. அரக்கோணம் துரைசாமி நகர் பகுதியில் ஜெபக்கூட அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பெரிய டிவி, மைக் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். அப்போது, அங்கு பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவை பார்த்த திருடன் மாற்றுத்திறனாளி போல நடந்து தனது உடல்மொழியை மாற்றினார். இந்த காட்சிகள் வைரலாகி உள்ளநிலையில், மர்ம நபர்களை அரக்கோணம் நகர போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com