Apollo Research || டார்க் சாக்லேட்மூலம் மார்பக சுயபரிசோதனை.. அப்போலோ கேன்சர் மையம் புது முயற்சி
இந்தியாவில் புதிதாக ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளில், 13 புள்ளி 5 சதவீதத்தினர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளில், 10 புள்ளி 6 சதவீதத்திற்கு, மார்பக புற்றுநோய் காரணமாகிறது. இந்த நிலையில், சென்னை அப்போலோ கேன்சர் மையம் சார்பில் மார்பகப் புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் (Anti oxidant) நிறைந்த 'செக் - ஓலேட்' எனப்படும் டார்க் சாக்லேட்டில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்தால், பெண்கள் தங்களது மார்பகங்களை எளிதாக மற்றும் சுயமாக பரிசோதனை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனால் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தேவையான சிகிச்சையை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
