அப்துல் கலாமின் 9ஆம் ஆண்டு நினைவு தினம்.. மாணவ, மாணவிகள், மலர் தூவி அஞ்சலி

ஆண்டு நினைவு தினம் இன்று ராமேஸ்வரம், பேய்க்கரும்பில் அமைந்துள்ள அவரது தேசிய நினைவகத்தில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை அவரது குடும்பத்தினர் கலாம் தேசிய நினைவுகத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் துவா ஓதி மலர் அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், அவரது தேசிய நினைவகத்தில அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன், பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் சித்தி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்

X

Thanthi TV
www.thanthitv.com