நாளை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு

x

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி ஏகனாபுரம் கிராம மக்கள் 425- வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பரந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் நீர்நிலைகளை ஆய்வு செய்ய தமிழக அரசின் சார்பில் பேராசிரியர் மச்சநாதன் தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் வரும் 26-ஆம் தேதி விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந் நிலையில்

தமிழக அரசின் குழு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறியல், கருப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்