அண்ணா பல்கலை. விவகாரம்... களமிறங்கும் தேசிய மகளிர் ஆணைய குழு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய குழுவினர் இன்று விசாரணையை தொடங்க உள்ளனர். இதையொட்டி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி கொல்கத்தாவில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தடைந்தார். இவர் தலைமையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.