கூடலூர் செம்பாலா பகுதியில் உலா வந்த ஒற்றை யானை, வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த தடுப்புகளை ஆக்ரோஷமாக இழுத்து வீசிய காட்சி அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நாய்கள் தொடர்ந்து குரைத்ததால் ஆத்திரமடைந்த யானை, மீண்டும் தடுப்புகளை இழுத்து வீசும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.