குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது - அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, காவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கு நன்றி கூறியதாக தெரிவித்தார். என்.ஆர்.சி - க்கு எதிராக, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை போல தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாக அன்புமணி கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com