"மாணவர்களின் யோசனைகளை படைப்புகளாக மாற்ற வேண்டும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து

x

மாணவர்களின் யோசனைகளை அறிவியல் படைப்புகளாக மாற்ற அரசு சார்பில் புதிய தளத்தை ஏற்படுத்தி தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் டார்வின் அறிவியல் மன்றம் சார்பில் அறிவியலைக் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசினார். மாணவர்களின் கண்டுபிடிப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், அதற்கான காப்புரிமைகளை பெறுவதும் அவசியம் என்றார். மாணவர்களின் படைப்புகளை ஊக்குவிப்பதற்காக கடந்த ஆண்டில் இருந்து நிதியுதவி கொண்டுவந்திருப்பதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்