ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய புள்ளி அருளை தனியே அழைத்து சென்ற போலீசார்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டிருக்கும் கைதி அருளை... போலீசார் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில், பொன்ன பாலு, ராமு மற்றும் அருள் ஆகியோரை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மூவரிடமும் போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வழக்கறிஞரான அருளை, சென்னை பெரம்பூர், புழல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com