பிரதமரை வரவேற்க பறந்த கொடிகளுடன் இடம்பெற்ற `விசிக கொடி' - சலசலப்பு
பிரதமர் மோடியை வரவேற்க பறந்த கொடிகளுடன் இடம்பெற்ற 'விசிக கொடி'
ஆடி திருவாதிரை விழா - 'பாஜக கூட்டணி கட்சி கொடி'-களுடன் பறந்த 'விசிக கொடி'
ஆடி திருவாதிரை விழா = ஒரே மேடையில் பிரதமரும், விசிக தலைவரும்..?
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் மோடி வர உள்ள நிலையில், அவரை வரவேற்பதற்காக வைத்திருந்த பாஜக, அதிமுகவினரின் கொடிகளுக்கு நடுவே 'விசிக கொடி' இடம்பெற்றிருந்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சோழப் பேரரசர் ராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை விழா அரசு விழாவாக மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகை தர உள்ள நிலையில், பொன்னேரியில் ஹெலிபேட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அரியலூரில் பிரதமரை வரவேற்கும் விதமாக சாலையில் பாஜக உள்ளிட்ட கட்சியினர் வைத்திருந்த கொடிகளுக்கு நடுவே, விசிகவினரும் தங்களது கட்சி கொடிகளை நட்டு வைத்துள்ளனர். இதற்கு காரணம் ஆடி திருவாதிரை விழாவில், விசிக தலைவர் திருமாவளவனும் பங்கேற்க உள்ளதாலேயே, அவரை வரவேற்க விசிக கொடிகள் நடப்பட்டதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
