கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட தடை கோரி வழக்கு - தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கூட்டணிக் கட்சி சின்னத்தில் தோழமை கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட தடை கோரி வழக்கு - தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

கூட்டணிக் கட்சி சின்னத்தில் தோழமை கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சின்னம் ஒதுக்கீடு குறித்து தேர்தல் அதிகாரி தான் முடிவு செய்வார் என்றும், அந்த முடிவை எதிர்த்து , தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com