"காவல்துறையை எச்சரிக்கின்றேன், நடுநிலையோடு செயல்படுங்கள்" - எடப்பாடி பழனிசாமி
ஜனநாயகத்திற்கு புறம்பாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஜனநாயகத்திற்கு புறம்பாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை காவல்துறையினர் மிரட்டுவதாக குற்றம்சாட்டினார். கீழே இருக்கும் சக்கரம் ஒருநாள் மேலே வரும் என்றும், சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் அதிகாரிகள், அதற்கான பலனை அனுபவிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
